36
ராரா.. ரோ ராரா.. ரோ
ராரி.. ரேரோ... ராரா ..ரோ..
ஏலம்பூ வாய் நோக
ஏனழுதான் என்னரியான்
பாலுக்கழுதானோ
பவள வாய் பொன் சொரிய
தேனுக்கழுதானோ
செம்பவள வாய் நோக
கரும்புக்கழுதானோ
கற்கண்டு வாய்நோக
அரசோ நவமணியோ
உன் அங்கமெல்லாம் தங்க மயம்
கனிமொழிந்த வாயாலே
உன் கண்ணிலிட்ட மை கரைய
ஆளப்பிறந்தவனே அழுகிறதும்
உன் முறையோ
அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் துஞ்சான்
மசன்டையில அமுதிடுங்கள்
மகராசா பேரனுக்கு
பகலோடு அமுதிடுங்கள்
பாண்டியனார் பேரனுக்கு
பொழுதோடு அமுதிடுங்கள்
புண்ணியவார் பேரனுக்கு
தாங்கத் தடுக்கிருக்கு உனக்கு
தங்கத்தால் ஆன தொட்டில்
ஏந்தத் தடுக்கிருக்கு உனக்கு
ஏந்திழையார் தாலாட்ட
கண்ணோ கமலப்பூ
உன் காதிரண்டும் தாமரப்பூ
மேனி மகிழம்பூ என் கண்ணே
மெல்ல நீ கண்ணுறங்கு
ராரோ ராரோ என் கண்ணே
ராரி ராரோ ராரோ
2 comments:
அழகான பாட்டு :) நன்றி ;)
பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!
Post a Comment