Tuesday, June 2, 2009

கட்டிக்கரும்பே...

24

கட்டிக்கரும்பே என்
கண்மணியே கண்ணுறங்கு
மாணிக்கத்தால் மாரகண்டி
வச்சிரத்தால் பொன் பதக்கம்

யாருக்கிடுவோமின்னு
தேடித் திரிகையில
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தவம் பெற்று வந்த கண்ணோ

கண்ணான கண்மணிக்கு
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போட்டோம் கடுதாசி

தட்டெரம்ப பொன் வாங்கி
தராசு கொண்டு நிறை நிறுத்து
அரும்பான மாலை கட்டி
அம்மான் அவசரமா வந்தாக

அத்திக்காய் வாளி செய்து
மலர்ந்த நல்ல சிமிக்கி செய்து
கோடி உடுத்தி காது
குத்துமென்பார் கண்மணிக்கு
ராராரோ ராரிரேரோ..

1 comment:

கோபிநாத் said...

கட்டிக்கரும்பு - நல்ல சுவை ;)

நன்றி ;)