Wednesday, November 19, 2008

நாழிச்சிறு சலங்கை...

17

நாழிச்சிறு சலங்கை
நல்ல பவுன் பொற்சலங்கை
உழக்குச்சிறு சலங்கை
ஒசத்தியுள்ள பொற்சலங்கை
ஆருக்கு இடுவமுன்னு
தேடித்திரிகையிலே
எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தவனோ!
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானாக வந்தவனோ!

மாசில்லா முத்தோ
மணி வயிரத்தோளானோ!
கல்விக்களஞ்சியமோ
கற்றோர்க்கு தாயகமோ!

செல்வ திருவிளக்கோ
செம்பொன் சுடரொளியோ!
தூண்டா மணிவிளக்கோ
சோதி சுடரொளியோ!

கண்ணில் உறுமணியோ
கலிதீர்த்த பெட்டகமோ!
பொன்னில் உறுமணியோ
பூவிலுறும் வாசனையோ!
கொடிக்கால் மருக்கொழுந்தோ
கோதை கையில் பூச்சரமோ!

No comments: